தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. சுங்கக்கட்டணத்தின் அளவு ஒவ்வொரு வகை வாகனங்களுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.25 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக 38 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.