tamilnadu

img

வேளாண் பட்ஜெட் 2025-26 – முக்கிய அறிவிப்புகள்

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

வேளாண் பட்ஜெட் 2025-26இன் முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:

"டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர்  சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.102 கோடி ஒதுக்கீடு.

தரமான விதைகள் வழங்க ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு. 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும்”

மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம்

63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு.

உழவர் பாதுகாப்பு நிதி உதவி உயர்வு

முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். நிலமற்ற வேளாண் தொழிலாளர்கலுக்கு விபத்து இறப்புக்கான இழப்பீடு ரூ.1 லடச்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இயற்கை இறப்புக்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இறுதி சடங்கி நிதி உதவி ரூ.2,500 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

வேளாண் கண்டுபிடிப்புக்கு பரிசு!

நவீன வேளாண் கருவிகள், நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து, கடைபிடிப்பதில் சிறந்து விளங்கும் 3 பேருக்கு, முதல் பரிசாக ரூ.2.5 லட்சமும், 2ஆம் பரிசாக ரூ.1,5 லட்சமும், 3ஆம் பரிசாக ரூ. 1 லட்சமும் வழங்கப்படும்

பொருளாதார சுமையை குறைக்க திட்டம்!

ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு உழவர்களின் பொருளாதார சுமையை குறைக்க ரூ.21 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும்.

நம்மாழ்வார் விருது!

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு

நம்மாழ்வார் விருது வழங்க ரூ.6 லட்சம் ஒதுக்கீடு.

காளான் உற்பத்தி நிலையம்!

காளான் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதிகளில் 5 காளான் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

இ-வாடகை செயலி!

இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்த ரூ.17.37 கோடி ஒதுக்கீடு.

மற்ற அறிவிப்புகள்

  • ரூ.10.63 கோடியில் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும். கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.297 கோடி ஒதுக்கீடு.
  • மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க ரூ.40 கோடியே 27 லட்சத்தில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும்.
  • பாரம்பரிய காய்கறி ரகங்களின் சாகுபடியை 2,500 ஏக்கரில் மேற்கொள்ள ரூ. 2.4 கோடி ஒதுக்கீடு.
  • தென்னை பயிர் செய்யப்படும் மாவட்டங்களில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த ரூ.4 கோடி ஒதுக்கீடு
  • துவரம் பருப்பு சாகுபடி குறைந்து வரும் மாவட்டங்களில் 80 லட்சம் ஏக்கரில் துவரை பயிர்விக்க ஊக்குவிக்கப்படும்.
  • நகர்ப்புற, கிராமப்புற மக்களின் ஊட்டச்சத்துகளை பாதுகாக்க 9 லட்சம் குடும்பங்களுக்கு 75 % எலுமிச்சை, கொய்யா செடிகளின் தொகுப்பு வழங்கபடும்.
  • மலர்கள் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.8.51 கோடி ஒதுக்கீடு.
  • பாரம்பரிய மலரான மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூ.1.60 கோடி ஒதுக்கீடு. மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3,000 ஆயிரம் ஏக்கரில் மல்லி பயிர் செய்ய ஊக்குவிக்கப்படும்.
  • ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
  • முந்திரி சாகுபடியை அதிகரிக்க முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க ரூ.10 கோடி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும்.
  • தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் 'கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' வரும் ஆண்டில் 2338 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்.
  • ரூ.15.05 கோடியில் 7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிக்கப்பட்டுக் கொள்முதல் செய்யப்படும்.
  • இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு ரூ.15.05 கோடியில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும்.
  • ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கடைபிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை நேரடியாகச் சென்று கண்டுணர்ந்து, அதனை தங்கள் வயல்களில் செயல்படுத்தும் விதமாக 100 முன்னோடி உழவர்கள் மேற்கூறிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு.