சென்னை, பிப்.23- மத்திய பாஜக அரசின் மிகமோசமான அரசியல் நட வடிக்கையான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப் பேட்டை லாலாகுண்டாவில் 10 ஆவது நாளாக எழுச்சியு டன் நடந்து வருகிறது. மக்களை பிரித்தாளும் நோக்கோடு பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடி யுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை கணக் கெடுப்பு (என்பிஆர்) ஆகிய வற்றுக்கு எதிராக இந்தியா முழுவதும் வலுவான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவி லேயே முதன் முறையாக கேரள சட்டமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று (பிப்.14) பழைய வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அறவழியில் போராட்டம் நடத்தி வந்த மக்களிடம் காவல்துறையினர் ஆரம்பம் முதலே கெடுபிடி காட்டினர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை வலுக்கட்டாயமாக இழுத்து பொதுமக்களை தாக்கி கைது செய்தனர். தில்லி ஷாஹின்பாக் பகுதியில் மக்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வருவது போல் சென்னை ஹின்பாக் ஆக வண்ணாரப் பேட்டை லாலாகுண்டா மாறியது. பேராட்டம் துவங்கியதிலிருந்து இரவு-பகல் என ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பொதுமக்கள் மத்தியில் பேசி வருகின்றனர். சனிக்கிழமையன்று (பிப்.22) டெல்லி பல்கலைக் கழகத்தின் மாணவர் பேர வைத் தலைவர் ஆயிஷி கோஷ் பங்கேற்று, ‘ஜெஎன்யூ பல்கலைக்கழ கத்தில் மதவெறி ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிக்சத் குண்டர்களின் தாக்கு தலை விளக்கியும், மத்திய அரசுக்கு எதிராக ஆவேச முழக்கமிட்டார். இந்திய மாணவர் சங்கத் தலைவர் கண்ணன், செயலாளர் வி.மாரிப்பன், இசக்கி, ராஜேந்திரபிரசாத் ஆகியோர் உடனிருந்தனர். ஞாயிறன்று (பிப்.23) உண்மை அறியும் குழுவின் சார்பில் வழக்கறிஞர் திரு மூர்த்தி உள்ளிட்ட பலர் பேசினர். மேலும் போராட்டத் தில் பங்கேற்ற குழந்தைகள் குடியுரிமை சட்டத் திருத்தத் திற்கு எதிராக ஓவியங்ளை வரைந்தனர். இதை அப்பகுதியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.