tamilnadu

திருத்தணிக்காசலம் கைது

சென்னை, மே 6- கொரோனா தொற்றை  குணமடையச் செய்வதற் கான மருந்து தன்னிடம் உள்ளதாக கூறி சமூக வலைத்தளத்தில் வீடியோ  வெளியிட்ட திருத்தணிகாச லம் கைது செய்யப்பட்டார். கொரொனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ லில் அதற்கான மருந்தை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியாளர்கள் நடை பெற்று வருகின்றன. இந் நிலையில் சென்னை கோயம்பேட்டை சேர்ந்த சித்த மருத்துவர் என  கூறப்படும் திருத்தணிகாச லம், கொரோனா தடுப்பு  மருந்து கண்டு பிடித்துள்ள தாகவும், ஒரே நாளில் தொற்றை குணப்படுத்தி விடு வதாகக் கூறி சமூக வலைத்  தளத்தில் வீடியோ வெளி யிட்டார்.  இதனடிப்படையில இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குனர் அண்மையில் காவல்துறையில் ஒரு புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், கொள்ளை நோய் சட்டம், தக வல் தொழில்நுட்ப சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அரசுக்கு எதி ரான அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருத்  தணிகாசலத்தை கைது செய்துள்ளனர்.