tamilnadu

img

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வெளியீடு!

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
கடந்த 2021-22 இடைக்கால பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கென மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு கடந்த 2022-இல் அமைக்கப்பட்டது. இக்குழு, 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கடந்த ஜூலை மாதம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், 3, 5, 8 ஆம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும், தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப் பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.