tamilnadu

தையல் தொழிலாளர்களுக்கு 9 மாத ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்

திருவள்ளூர், மே 15 - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட தையல் தொழிலாளர்களுக்கு, கடந்த 9 மாதமாக நலவாரியம் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. தமிழக அரசு ஊரடங்கையொட்டி அறிவித்த நிவாரணம் ஆயிரம் ரூபாயும், உணவுப் பொருட்களும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, இவற்றை விரைந்து வழங்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு திருவள்ளூர் மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பி.நடேசன் மனு அனுப்பியுள்ளார்.