tamilnadu

img

ஊழலால் வங்கிகள் மீது சந்தேகம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

சென்னை,நவ.24- மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட ஊழல் முறைகேடு காரணமாக அந்த வங்கி திவாலானது. இதனால் வங்கிகள் மீது பொதுமக்கள் சந்தேகப் பார்வை பார்க்கின்றனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின்  116வது நிறுவன தின விழா  சென்னையில்  நடை பெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி யின் செல்லிடப்பேசி செயலியை வெளியிட்டு பேசியது: ஒரு நிறுவனம் 100 ஆண்டுகள் உயிர்ப்போடு இருந்தால் அது மிகப்பெரிய சாதனை. ஒரு நாட்டின் வளர்ச்சியை அங்குள்ள நிறு வனங்களை முன்னிறுத்தி சொல்கிறோம். வளர்ச்சி ஒரு பகுதி என்றாலும் கூட களங்கம் இல்லாமல் செயல்படுவது முக்கியம். பங்குதாரர்களின் பணம், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரின் வைப்புநிதி உள்ளிட்டவற்றை பாது காப்பாக வைக்கும் கடமை வங்கிகளுக்கு உள்ளது. மேலும் தங்களின் பணம் குறித்த எந்தவித பயமும் இல்லாமல் வாடிக்கையா ளர்களை வைத்திருப்பது மிகப் பெரிய விஷயம். இதற்கான பொறுப்பு ஒரு வரை மட்டும் சார்ந்தது அல்ல. வங்கியில் பணிபுரியும் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். இதில் யாராவது ஒருவர் விலகினாலும் அங்கு ஒரு கேள்விக்குறி உருவாகிறது. ஒரு வங்கியின் மீது எப்படிப்பட்ட சந்தேகமெல்லாம் எழுப்பப்படுகிறது என நாம் பார்க்கிறோம். எங்கோ ஒரு கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலால் பொதுமக்களின் பணம் வங்கிகளில் பாதுகாப்பாக இருக்கிறதா என்று மக்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள். இதை விட, கடந்த காலங்க ளில் வங்கிகள் சரிவை சந்தித்தபோது கூட மீண்டெழுந்திருக்கிறோம்.நாம் சார்ந்துள்ள பல்வேறு நிறுவனங்களையும் நாம் விழிப்புடன் கவனித்து வருகிறோம்.  தற்போது வணிகத்தைப் பெருக்குவது மிகப் பெரிய வியாதியாக உருவெடுத்து வருகிறது. வணிகத்தைப் பெருக்குவது, கிளைகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் நன்கு ஆராய்ந்த பிறகே ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், வங்கியின் தலைவர் ஆர். மோகன், மேலாண்மை இயக்குநர் என்.காமகோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.