tamilnadu

img

குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை - சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
18 வயது நிறைவாடையாத பெண்ணுக்கும். 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடத்துவது குழந்தைகள் திருமண தடைச்சட்டம் 2006 ன்படி, பெருங்குற்றமாகும். 18 வயது நிரம்பாத பெண்குழந்தையைத் திருமணம் செய்யும் ஆணுக்கு அதிகபட்சமாக 2 வருட சிறைத்தண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இக்குற்றம் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும்.