சென்னை,மார்ச் 3- சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டி சென்னையில் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. துரைப்பாக்கத்தில் உள்ள எம்என்எம் ஜெயின் கல்லூரி உதவியுடன் ரோட்டரி சங்க சென்னை மத்திய கிளை நடத்தவுள்ள இந்த போட்டியில் 75 பள்ளிகளை சேர்ந்த 1400 குழநதைகள் பங்கேற்க உள்ளனர். 500க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விளையாட்டுப்போட்டியை பிரபலப்படுத்த சுவரொட்டி வெளியிடப்பட்டது. இதனை காவல்துறை அமலாக்கப்பிரிவு டிஜிபி ராஜேஷ் தாஸ் வெளியிட்டார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஐசக் நாசர்,ரிஷிதின் நசீர், ரோஹன் கும்பட் மற்றும் சிறப்பு குழந்தைகள் அவர்களது பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.