tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்து குறித்து கருத்தரங்கம்

விழுப்புரம், ஜூலை 7- தேசிய கல்விக்  கொள்கை 2019 ஐ நாம் ஏன் நிராகரிக்க வேண்டும் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகியவை இணைந்து விழுப்புரத்தில் கருத்தரங்கம் நடத்தின. தமுஎகச மாவட்டத் தலைவர் ஆ.பக்கிரிசாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ச.மது சுதன், வாலிபர் சங்க செயலாளர் சே.அறிவழகன், மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஜி.குகன், அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் சு.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கூட்டணி மாவட்டப் பொருளாளர் து.தண்டபாணி வரவேற்றார். ‘இந்திய கல்வியின் இருண்ட காலம்’ என்ற தலைப்பில் உரையாற்றிய தமுஎகச மாநில துணைச் செயலாளர் கி.அன்பரசன், தேசிய கல்விக்  கொள்கை 2019 ன் வரைவு குறித்த புத்தகத்தை வெளியிட்டார். அதனை கூட்டுறவுத் துறை ஜெயபாலன் பெற்றுக் கொண்டார். ‘தேசிய கல்விக் கொள்கையின் அபத்தங்களும், ஆபத்துக ளும்’ என்ற தலைப்பில் கவி ஞர் நா.முத்து நிலவனும், ‘இனி எதிர்கொள்ள வேண்டி யது’ என்ன என்ற தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் ஜி.செல்வா ஆகியோர் சிறப்புரையாற்றினர், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் என்.சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், பொருளாளர் வி.பால கிருஷ்ணன்,மாதர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா, மாவட்டத் தலைவர் எஸ்.நீலா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சு.பிர காஷ் உள்ளிட்ட பலர் பேசி னர்.