தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம்
தமிழக அரசு அமைத்த ஓய்வூதியக்குழு முழுமையான அறிக்கை வழங்காமல், இடைக்கால அறிக்கை அளித்து ஏமாற்றுவதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக திங்களன்று (அக்.6) தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து சென்று பணியாற்றினர்.