திருப்பூர், ஜூன் 25 - வருவாய்த் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைளை முன் வைத்து வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் தொடர் முழக்கப் போராட்டம் நடை பெற்றது. திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகில் இருந்து செவ்வாயன்று பேரணி தொடங்கியது. கோரிக்கை பதா கைகள் ஏந்தி வருவாய்த்துறை அலுவ லர்கள் தென்னம்பாளையம் வழியாக பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேர ணியை நிறைவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த தங்கவேலு தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகி பிரபு, கிராம ஊழியர் சங்க நிர்வாகி சக்தி வேல், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் மதன்குமார், மாவட்டப் பொருளாளர் ஆறுமுகம், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலா ளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் செந்தில்குமார் நிறைவுரை ஆற்றினார். வருவாய்த் துறையினர் நடத்திய இந்த போராட்டத்தின் காரணமாக ஆட் சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒட்டுமொத்த பணிக ளும் முடங்கியது. மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் ஒட்டு மொத்த ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து இப்போராட்டத்தில் பங்கேற்ற னர்.