சென்னை, நவ. 22- குடிமனைப் பட்டா கேட்டு வெள்ளியன்று (நவ.22) வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமா னோர் மனு அளித்தனர். சென்னை மாநகராட்சி, 180வது வட்டம் தரமணி மகாத்மா காந்தி நகர், எம்ஜிஆர் நகர், அன்பழகன் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். இப்ப குதி மக்கள் குடிமனைப் பட்டா கேட்டு பல ஆண்டுக ளாக போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடை பெற்றது. பட்டா மனுக்க ளோடு 500க்கும் மேற்பட் டோர் வட்டாட்சியர் அலு வலகத்தில் குவிந்தனர். இத னையடுத்து வட்டாட்சியர் செந்தில்குமார் நேரடியாக வாயிலுக்கே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் மார்க் சிஸ்ட் கட்சித் தலைவர்க ளுடன் வட்டாட்சியர் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது தொகுதி முழு வதும் பட்டா வழங்க வேண்டிய நகர், தெரு, வீடுகள் எண்ணிக்கை உள்ளிட்டவைகளை மனு வாக கொடுத்தனர். மனுக் களை ஆய்வு செய்து, வருவாய் கோட்டாட்சி யருக்கும், ஆட்சியருக்கும் அனுப்பி தேவையான நடவடிக்கைகளை எடுப்ப தாக வட்டாட்சியர் உறுதி யளித்தார். வேளச்சேரி பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், பகுதிக்குழு உறுப்பினர்கள் ரபீக்,ராமமூர்த்தி, துர்க்கைபிரசாத், ஆஷா, கிளைச் செயலாளர்கள் ஸ்ரீதர், திவாகர், செல்வராஜ், உள்ளிட்டோர் பேசினர்.