tamilnadu

img

கடலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நிறைவு

கடலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நிறைவு

கடலூர், ஜூன் 21 - கடலூர் மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குழுக்களோடு ஆயி ரத்திற்கு மேற்பட்ட கிராமங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சாரம் நிறைவடைந்தது. ஒன்றிய பாஜக அர சின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்தும், மாநில திமுக அரசு மக்கள் நல திட்டங்களை விரைந்து அமலாக்க  வலி யுறுத்தியும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும், ரேஷன் கடைகளில் அத்தி யாவசிய பொருட்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும், குடிநீர், சாலை, தெரு விளக்கு வசதி களை நிறைவேற்ற வலி யுறுத்தியும்  நூற்றுக்கு மேற்பட்ட குழுக்கள் கடலூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராமங்கள் வழியாக ஜூன் 11 முதல் 21ஆம் தேதி வரை நடைபயணமாக சென்று கிளர்ச்சி பிரச்சாரம் நடத்தி னார். பிரச்சார நிறைவை யொட்டி கடலூர் நான்கு முனைகளில் இருந்து தொடங்கிய பிரச்சாரம் திருப்பாதிரிப்புலியூர் ஜவான்ஸ் பவன் அருகே நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன், கடலூர் ஒன்றிய செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், சிப்காட் பகுதிச் செயலாளர் எம்.சிவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.வெங்கடேசன், எஸ்.கே.பக்கிரான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர். வடலூர்  தமிழக அரசு மாதா மாதம் மின் கட்டணம் வசூ லிக்க கோரி வடலூரில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு நகர செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். மேல கொளக்குடி, கருங்குழி, நைனா குப்பம், ராஜா குப்பம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு ஆகியோர் பேசினர். கம்மாபுரம் கம்மாபுரம் கடை வீதியில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.இளங்கோவன், கிளை செயலாளர்கள் வேல்முரு கன், ராஜேந்திரன், பெசு.விரா, கண்ணன், வளைய மாதேவி சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  விருத்தாசலம் ஏழை எளிய மக்க ளுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி விருத்தாசலம் கடைவீதியில் தொடங்கி பாலக்கரையில் நிறை வடைந்தது. பிரச்சாரத்திற்கு ஒன்றியச் செயலாளர் கே.எம்.குமரகுரு தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் ஏ.சந்திர சேகரன், ஆர்.சங்கரய்யா, மூத்த தோழர் ஆர்.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன் உள்ளிட்டோர் பேசினர்.  குறிஞ்சிப்பாடி குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க நடைபயணம் ஒன்றியச் செயலாளர் எம்.பி.தண்ட பாணி தலைமையில் நடை பெற்றது. குறிஞ்சிப்பாடி சாவடியிலிருந்து பிரச்சார நடைபயணம் புறப்பட்டு சின்னக்கடை வீதி, காந்தி சிலை வழியாக பெருமாள் கோவிலை சென்றடைந்தது. மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.கே.சரவணன் துவக்கி வைத்து பேசினார். மூத்த தோழர் ஆர்.சிவகாமி, நகர அமைப்பு குழு செயலாளர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட பலர் பேசினர். மேல்பட்டாம்பாக்கம் பட்டாம்பாக்கம் இரு முனை ரோட்டில் தொடங்கி அம்பேத்கர் சிலை அருகே நிறைவுபெற்ற பிரச்சார நிகழ்ச்சிக்கு பகுதிக்குழு உறுப்பினர் இ.சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். பகுதி குழு உறுப்பினர்கள் ஆர். வெங்கடேசன், ஜி.அருள் மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு பிரச்சாரத்தை நிறைவு செய்து பேசினார். மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஜெயபாண்டியன், பகுதிக் குழு செயலாளர் ப.ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  நெய்வேலி நெய்வேலி நகரம் வட்டம் 9 இல் தொடங்கி மெயின் பஜாரில் நிறைவு பெற்றது. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு நிறைவு செய்து பேசி னார். நகரச் செயலாளர் ஆர்.பாலமுருகன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.ஜெயராமன் உள்ளிட் டோர்  கலந்துகொண்டனர். புதுப்பேட்டை  பண்ருட்டி வட்ட குழு சார்பில் கோட்லாம்பாக்கம் முதல் புதுப்பேட்டை கடைவீதி வரை மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் மற்றும் நடைபயணம் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டக் குழு உறுப்பி னர் டி.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மூத்த தோழர் எம்.ராஜேந்திரன், வட்டக்குழு உறுப்பினர் எம்.கெளரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன், வட்டச் செயலாளர் எஸ்.கே.ஏழுமலை, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.வினோத்குமார் உள்ளிட்ட பலர் கோரிக்கை விளக்கி பேசினர்.