tamilnadu

புதிய காற்றழுத்த தாழ்வு: கன மழை நீடிக்கும்

சென்னை, அக். 17- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவ லாக மழை பெய்து வரும் நிலையில் புதியதாக காற்ற ழுத்து தாழ்வு உருவாகி யிருக்கிறது. தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை நிறைவு பெற்று அதிக மழையை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்  யும். கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை 20  விழுக்காடுதான் பெய்தது.  ஆனால் இந்த ஆண்டு இயல்  பான அளவான 44 விழுக்காடு  மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதை உறுதிப்படுத்துவது போல வடகிழக்கு பருவமழை தொடங்கியதுமே தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் இலங் கையின் வடக்குப் பகுதியில் தமிழக தென் கடலோர எல்லையையொட்டி வங்கக்  கடலில் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு உருவாகி யிருக்கிறது. இதன் காரண மாக தமிழக கடலோரத்தை யொட்டி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்  ளது. இந்த மேலடுக்கு சுழற்சி வங்கக் கடலின்  தென்மேற்கு பகுதியிலிருந்து மேற்கு மத்திய பகுதி வரை கடல் மட்டத்திலிருந்து 1.5 கிலோ மீட்டர் முதல் 2.1 கிலோ மீட்டர் வரை பரவி காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குமரிக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 60 கிலோ  மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே மாலத் தீவு அருகே புதிய புயல்  ஒன்று உருவாகி இருக்கிறது.  அது 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல் மேல்  வளிமண்டலமாக பரவி  உள்ளது. அது தென்மேற்கு திசையை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம் மாதம் 21 ஆம் தேதி  வரை தமிழ்நாடு -புதுச்சேரி யில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும்  என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.