tamilnadu

விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரயில்

சென்னை, நவ.13-  சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டையிலிருந்து  விமான நிலையத்துக்கு தற்போது பயணிகள் சேவை நடந்து வருகிறது. 2 ஆவது கட்டமாக  மாதவரம்- சிறுசேரிக்கு மெட்ரோ ரயில் வழித்தட பாதை அமைக்க திட்டப்பணி ஆய்வுமுழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் கிளாம்பாக்கத்துக்கு 15.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜி.எஸ்.டி. சாலையில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் வருகிற 2021 ஆம் ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சாலை வழித்தடத்தில் விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, திரு.வி.க.நகர், தாம்பரம், இரும்புலியூர், பெருங்க ளத்தூர் ஆர்.எம்.கே.நகர், வண்டலூர், வண்ட லூர் வனவியல் பூங்கா, கிளாம்பாக்கம் உள்பட 13 ரயில் நிலையங்கள் அமைக்கப்படு கிறது. புதிய மெட்ரோ ரயில் வழித்தடம் ஜி.எஸ்.டி. சாலையில் உயர்மட்ட பாதையில் அமைக்கப்பட உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து புதிய மெட்ரோ ரயில் வழித்தட பாதை கிளாம்பாக்கம் பஸ் டெர்மினல் வரை நீட்டிக்கப்படுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தென்சென்னை பகுதியில் அனைத்து பகுதி மக்களையும் கவரும் விதமாக புதிய மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை 12.3 கிலோமீட்டர் தூரத்துக்கு ஜி.எஸ்.டி. சாலை யில் உயர் மட்டப்பாதையில் மெட்ரோ ரயில் வழித்தட பாதை உருவாக்கப்படும். ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் 13 ரெயில் நிலையங்கள் கட்டப்படுகிறது’ என்றார்.