சென்னை, மே 22-கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலை யில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும். இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக சின்னம்மை, சரும நோய் கள் வராமல் தடுக்கவும், மாணவர்களின் உடல்நலம் பாதுகாக்க வேண்டும், கற்றலும், கற்பித்தலும் சிறப்பாக நடந்திட மாணவர்களின் உடல்நலம் மிகவும் அவசியம். வெயிலின் கடுமையினாலும் மழை பொய்த்துப் போனதால் வறட்சியினால் தண்ணீர் தட்டுப்பாடு மிகுந்து காணப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சதத்தைத் தாண்டி 106 டிகிரி வரை சுட்டெரிக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் பெரியவர்களாலேயே வெளியில் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. அப்படியிருக்க பள்ளிச்சிறார்கள் எப்படி இந்த வெயிலைத் தாங்கமுடியும்.எனவே மாணவர்களின் உடல் நலத்தினை கருத்தில் கொண்டும் பெரும்பாலான பெற்றோர்களின் வேண்டுகோளின்படியும் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள பள்ளிகள் திறப்பதை இரண்டு வாரங்கள் அல்லது வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் முதலமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளது.