சென்னை மாதவரம் பகுதியில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நல வாரிய ஆன்லைன் உறுப்பினர் பதிவு மையத்தை சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் துவக்கி வைத்தார். பெயர் பலகையை மாவட்ட இணை செயலாளர் சு.லெனின்சுந்தர் திறந்து வைத்தார். கட்டுமான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் லூர்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் கமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.