மலைவாழ் பழங்குடி மக்கள் பாதுகாப்பு கோரி ஜவ்வாது மலையில் நடைபயணம்
திருவண்ணாமலை, ஜூன் 16 - மலைவாழ் பழங்குடி மக்களை பாது காக்க கோரி ஜவ்வாது மலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நடை பயண பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நடை பெற்ற இந்த நடை பயண இயக்கத்திற்கு மலை கமிட்டி தலைவர் பி.பொன்னுசாமி தலைமை தாங்கினார். மலை கமிட்டி பொறுப்பாளர் சரத்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் மற்றும் பழங்குடியினர் ஆன்றோர் மன்ற உறுப்பி னர் இரா.சரவணன் துவக்க உரையாற்றி னார். ஜவ்வாது மலை கீழ்க்கனவாய் முதல் ஜமுனாமரத்தூர் பேருந்து நிலையம் வரை, ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள், மலை கிராம சாலைகள் வழியே இந்த நடைபயண இயக்கம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட தையல் சங்க மாவட்ட செயலாளர் எம்.வீரபத்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இரா.சிவாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போளூர் வட்டார செயலாளர் இரா.ரவி தாசன் உள்ளிட்டோர் இந்த நடைபயண இயக்கத்தில் கலந்து கொண்டனர். ஜவ்வாதுமலையில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சாலை, மின்சாரம், குடி நீர் வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்துத்தர வேண்டும். அமிர்தியிலிருந்து ஜமுனாமரத்தூர் வழியாக செங்கம் பரமனந்தல் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த தார் சாலையை செப்பனிட நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்ட பணியை உடனே துவக்கிட வேண்டும். வருவாய்துறை நிலங்களில் பட்டா வழங்க தடையாக உள்ள அர சானை 1168 ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். நெல், சாமை, திணை, வரகு மற்றும் மலையில் விளைக்கூடிய அனைத்து பொருட்களுக்கும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த நடைபயண இயக்கத்தின் போது நிர்வாகிகள் உரை யாற்றினர்.