tamilnadu

img

பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெருமாள் மணிமேகலை பொறியியல்  கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கிருஷ்ணகிரி, மே 31- ஓசூர் பெருமாள் மணிமேகலை பொறி யியல் கல்லூரியில் 20 - வது ஆண்டு பட்ட மளிப்பு விழா  நிறுவனத்தின் தலைவா் பி.குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினரான விமான பொறி யியல் துறை அதிகாரி  சேதுமாதவன் மாண வா்களுக்கு பட்டங்களை வழங்கினார். உலக அளவில் மிகவும் வேக மாக வளா்ந்து வரும் செயற்கை நுண்ண றிவு (ஏஐ) தொழில்நுட்பம் இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் கணினி அறிமுகமான போது இனி இளைஞா்களின் வேலை களை கணினி செய்துவிடும், இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பு குறையும் என தெரிவித்தனர்,ஆனால் கணினி துறையில் இளைஞர்களுக்கு பெரு மளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. தகவல் தொழில்நுட்பம் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருக்கும். அதற்கு தகுந்தவாறு இளைஞா்கள் தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இளைஞா்கள் தொழில்நுட்ப அறிவு,தலைமைப் பண்புடன் செயல்பட்டால் வாழ்வில் முன்னேறலாம் என்றார். இதில் பிஎம்சி டெக் செயலாளர் பி.மலா், அறங்காவலா் சசிரேகா, இயக்கு நா்கள் சுதாகரன், சரவணன், டீன் ரவிச்சந்திரன், முதல்வா் செந்தில்குமார், பேராசிரியா் கார்த்திகேயன்,மக்கள் தொடர்பு அலுவலர் ஜே.விஜயகுமார் கலந்து கொண்டனர்.

ரூ.4 கோடி போதை பொருட்கள் அழிப்பு

செங்கல்பட்டு, மே 31-  தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் ஜி.ஜே.மல்டிகிளேவ் எனும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனத்தில் மாவட்ட காவல் துறையினரால் ரூ.4 கோடி மதிப்புள்ள சுமார் 3,520 கிலோ கஞ்சா, 250 கஞ்சா சாக்லேட் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.