சென்னை, ஜூன் 20- சென்னை கிரீம்ஸ் சாலை யில் உள்ள அப்பல்லோ மருத் துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி புத னன்று (ஜூன் 19) சென்றார். அவ ருக்கு பொது உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, வீடு திரும்பிய அவர் தலை மைச் செயலகம் வரவில்லை. இத னால், தண்ணீர் பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சி யர்கள் உள்ளிட்டோருடன் அவர் காணொலிக் காட்சி மூலம் நடக்க விருத்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பொது உடல் பரிசோதனைக்காக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி வியாழனன்றும்(ஜூன்20) அப்பல்லோ மருத்துவ மனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு உடல் பரிசோதனை கள் மேற்கொள்ளப்பட்டு சுமார் ஒரு மணிநேரத்துக்குப் பின் அவர் புறப்பட்டுச் சென்றார்.