tamilnadu

img

சிறுபான்மையினர் மீதான வன்செயல்களுக்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை,மார்ச்.3-  சிறுபான்மையினர் மீதான வன் செயல்களுக்கு குற்றவாளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வடசென்னை மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற 3 ஆவது மாவட்ட மாநாட் டிற்கு மாவட்டத் தலைவர் எம்.ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் டி.லட்சு மணன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகம்மது சிறப்புரையாற்றினார். சித்தர்கள் மரபுவழி மார்க்கம் மக்கள் பேரவை நிறுவனத் தலைவர் குங்குமச்சித்தர், மஜித் கூட்டமைப்புத் தலைவர் முகம்மது பஷீர் ஆகியோர் கருத்துரை யாற்றினர். வண்ணாரப்பேட்டை பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஓய்.லத்தீப், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில், வடசென்னை மாவட்டச்  செயலாளர் எம்.ஜலாலுதீன், வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா போராட்டக்குழு உறுப்பினர் தாஹிரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்.வேணுகோபால் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
நீதியரசர் ராஜேந்தர் சச்சார் ஆய்வறிக்கையில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பெரும்பாலானவர்க ளுக்கு நிலம் கிடையாது. அவர்கள் வேலை வாய்ப்பிலும் பின்தங்கிய நிலை யிலேயே உள்ளனர். பெரும்பாலான இஸ்லாமியர்கள் அன்றாட பிழைப்புக் காக சிறுவியாபாரத்தில் ஈடுபடக்கூடிய நிலையிலேயே உள்ளனர். அவர்களின் குழந்தைகளுக்கு போதிய கல்வி வசதி கிடைக்கப்பெறவில்லை. அவர்களுக்கு குடியிருப்பு வசதியும் தேவையான அளவிற்கு இல்லை என பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி யுள்ளது.  இந்நிலையில் அவர்கள் வாழ்க்கை யில் முன்னேற்றம் காண மத்திய அரசு தலித்துகள், பழங்குடி மக்களுக்கு வழங்கப்படுவது போல் சிறப்பு உபத்திட்டம் உருவாக்கி நாட்டின் வளங்கள், நிதி ஆதாரங்கள் அவர் களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். கல்வியில் உருது மொழியில் பயில, உருது மொழி பள்ளிகளை தொடர்வதும், உருது மொழி கற்ற ஆசிரியர்களை நியமிப்பதும் உறுதி செய்ய வேண்டும், அறிவியல்பூர்வமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த கல்வியை மதரசாக்கள் மூலம் உறுதி செய்வேண்டும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதை உறுதி செய்யவேண்டும், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும், மதக்கல வரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண உதவியை உடனே கிடைக்கச் செய்ய வேண்டும், தலித் கிறிஸ்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், சிறுபான்மையினர் மீதான வன்செயல்களுக்கு குற்றவாளி கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், குடியுரிமை சட்டத்திருத்த த்தை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
வடசென்னை மாவட்டத் தலை வராக ஏ.கே.ஷாஜகான், செயலாள ராக கே.எஸ்.கார்தீஷ்குமார், பொரு ளாளராக எஸ்.ஏ.அமல வெற்றிராஜன் உள்ளிட்ட 33 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது