tamilnadu

img

பெண் ஆய்வாளர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் காவலர்கள்

சென்னை, அக். 18- தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக வேலை  செய்து வந்தவர் ஸ்ரீதேவி (48). இவரது கண வர் முருகன். இவர்களுக்கு வர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை  பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அவரது மரண செய்தி பெண்  காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏட்டாக இருந்து ஆய்வாளர் வரை பதவி உயர்வு பெற்ற ஸ்ரீதேவி சக காவ லர்களிடம் அன்புடன் பழகுவாராம். இதனால்  பெண் காவலர்கள் மத்தியில் ஸ்ரீதேவிக்கு நல்ல பெயர் இருந்துள்ளது. இதனால் ஸ்ரீதேவி மரணமடைந்தார் என்பதை கேள்விப்பட்டதும் ஏராளமான பெண் காவலர்கள் ஸ்ரீதேவி வீட்டிற்கு திரண்டு அஞ்சலி செலுத்தினர். பொதுவாக இறுதிச்சடங்கு முடிந்து உடலை சுடு காட்டுக்கு கொண்டு செல்லும்போது பெண்கள் வரமாட்டார்கள். ஆனால் ஸ்ரீதேவி யின் உடலை தகன மேடை வரை பெண் காவ லர்களே சுமந்து சென்றார்கள். குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடைபெறும் அடக்கத்தை விட இதுதான் மிகப்பெரிய கவுரவம், பெருமை என காவ லர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.