சென்னை:
திருவாரூரில் விவசாய சங்க மற்றும் விவசாயிகள் ஆதரவு தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைக் கைவிடக்கோரி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் விவசாயிகள் போராட்ட ஆதரவு அமைப்புகள் சார்பில் சனிக்கிழமையன்று (ஜன.30) சென்னை காயிதேமில்லத் கல்லூரி அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வாழ்த்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.
விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வெற்றிவேல் செழியன் (மக்கள் அதிகாரம்), முகமது கவுஸ்(வெல்பேர் பார்ட்டி), ரங்கசாமி (ஏஐகேகேஎம்எஸ்), அருள்தாஸ்(என்ஏபிஎம்), சாமிநடராஜன் (ஏஐஎம்எஸ்), சமூக ஆர்வலர்கிள்ளிவளவன், கணேசன் (பத்திரிகையாளர்), கிருஷ்ணவேணி (சுயாட்சி இந்தியா), தங்கவேலு (காப்பீட்டு கழகம்), சாரு (வாய்ஸ் ஆப் பீப்பிள்), ஜாஹிருசேன் (தன்னாட்சி), செபாஸ்டீன் உள்ளிட்ட பலர் பேசினர்.