கிருஷ்ணகிரி, பிப். 25- பர்கூர் வட்டம் சூலாமலை ஊராட்சி மருதே பள்ளி அருகில் கருங்கன் கொட்டாய் கிராமப் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ராமசாமி ஏரி உள்ளது. இந்த ஏரி.மூன்று தலைமுறை களுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. ஏரி அருகில் 61ஆவது சர்வே எண்ணிலும், அதை யொட்டியும் மகேந்திரன், சேட்டு உட்பட 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்க ளின் 60 ஏக்கர் நிலம் இந்த ஏரி மூலம் நீரா தாரம் பெற்று விவசாயம் நடைபெற்று வரு கிறது. குடியிருப்பு பகுதிகளுக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி சீனிவாசன் நகரில் உள்ள சீனி என்பவர் ஏரி தனக்கு சொந்த மானது என்று ஆக்கிரமிக்க கல்தூண்களை ஏரியில் இறக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படு கிறது. இதனால், ஏரியை ஆக்கிரமிக்கக் கூடாது என விவசாயிகள் சீனியிடம் கூறியுள்ள னர். அதற்கு அவர் ஏரி தனக்கு சொந்தமானது என்றும், அதை ஆக்கிரமிப்பேன் என்றும் கூறி யுள்ளார். மேலும் விவசாயிகளை மிரட்டிய தாகவும் கூறப்படுகிறது, ஏரியை மீட்டுத் தருமாறு விவாசயிகள் மாவட்ட ஆட்சியரிடமும், வருவாய் அலுவலரி டமும் மனு அளித்தனர். இதில் 100க்கும் மேற் பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.