29 வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர்இயு சி.ஐ.டி.யு. சார்பில் அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்பில் தலைவர் நந்தகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் புவனேஸ்வரன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் துரைராஜ், துணைத் தலைவர் ஏபிஎம் சீனிவாசன், நிர்வாகிகள் அருள், கிருஷ்ணன், ரயில் பயணிகள் சங்கத் தலைவர் நயினார் மாசிலாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.