tamilnadu

img

கருவூல துறையை தனியார் மயமாக்காதே: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர், ஜூன். 7- தமிழ்நாடு முழுவதும் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அரசு கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பாக ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் செயலில் தமிழக அரசு ஈடு பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விப்ரோ  நிறுவனத்தின் மூலம் கருவூலம் மற்றும் கணக்குத் துறை பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதனால் இத் துறையில் பணிபுரி யும் அரசு ஊழியர்கள் வேலை இழப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்படும். மேலும் அரசு கஜானா விவரம், அரசு ஊழியர்கள் விபரம்  தனியார் தெரிந்து கொள்ளும் சூழ்நிலை உரு வாகும். எனவே அரசின் இத்தகைய முயற் சியை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வேலூர், ஆற்காடு, வாலாஜா,  அரக்கோணம், குடியாத்தம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய  பகுதிகளில் நடைபெற்றது. வேலூர் சார்  நிலை கருவூல அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு வட்டத் தலைவர் அ.பூசாமி தலைமை தாங்கினார். இதில் ஜாக்டோ ஜியோ மாவட்ட செய்தி  தொடர்பாளர் வா.ராமமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.