tamilnadu

திமுக எம்எல்ஏ கைது

சென்னை, ஜூலை 12- திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (திமுக) இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி உறுப்பினர் இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார், சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கரை வேறுஒருவருக்கு வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லட்சுமிபதியை, இமயம் குமார் உடன் வந்தவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். அப்போது லட்சுமிபதி தனது துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டார். அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த கீரை வியாபாரி சீனிவாசன் மீது குண்டு பாய்ந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இதயவர்மன் எம்எல்ஏ வை கைது செய்துள்ளனர்.