வனஸ்பதி ஆலை ஆக்கிரமிப்பு இடத்தை கையகப்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்
விழுப்புரம், மே 30- விழுப்புரத்தில் தனியார் வனஸ்பதி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை கையகப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை(மே 30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலை யம் அருகே உள்ள நகராட்சி திடலில் வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப் பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.சங்கரன், பி.குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் பேசுகையில், “அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் சில ஏக்கருக்கு மேல் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்துள்ள தனியார் நிறுவனம் மதராஸ் வனஸ்பதி நிறுவனத்திடமிருந்து நிலத்தை கையகப்படுத்தாமல், அப்பாவி மக்கள் 44 குடும்பங்களின் வீடுகளை இடித்திட முயற்சி செய்து, மக்களை வெளியேற்றி நடுத்தெருவில் நிற்க வைப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு வனஸ்பதி தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து வைத்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை உடனடியாக கையகப்படுத்தி அந்த இடத்தில் ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். ஆர்பாட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.வீரமணி,எஸ் .நீலா, எஸ்.ராஜாராமன், ஜி.ஜெயக்குமார்,வார்டு செயலாளர்கள் ஆர்.பிரேம்குமார், வி.சேகர், எம்.முருகன், என்.மேகநாதன், எம்.சுந்தர், யு.மதன்குமார், டி.ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். விழுப்புரம் நகராட்சியில் 19-வது வார்டு பவர் ஆபீஸ் ரோடு, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும், 17-வது வார்டு தாமரைக்குளம் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டது.