tamilnadu

img

மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி குள்ளஞ்சாவடியில் சிபிஎம் கிளர்ச்சி பிரச்சாரம்

மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி குள்ளஞ்சாவடியில் சிபிஎம் கிளர்ச்சி பிரச்சாரம்

கடலூர், ஜூன் 16- மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளைக் கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும் நெய்வேலி, குள்ளஞ்சாவடி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிளர்ச்சி பிரச்சாரம் நடைபெற்றது. நெய்வேலி நெய்வேலி கமிட்டி சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கம் பெரியாக்குறிச்சி பேருந்து நிலையம் முதல் நான்குரோடு வரை நடை பெற்றது. மந்தாரக்குப்பம் பிரதேச செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். நெய்வேலி நகரச் செயலாளர் ஆர்.பாலமுருகன் துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.ஜெயராமன், எம்.சீனிவாசன், கடலூர் மாவட்ட குடியிருப்போர் சங்க நிர்வாகி கள் ஏ. வேல்முருகன், ஜி.குப்புசாமி, வேளாங் கண்ணி, வீராசாமி, கே.மணி, ஆர். மணி கலந்து கொண்டு பேசினர். கென்னடி நன்றி கூறினார். குள்ளஞ்சாவடி குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் வி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, ஒன்றிய செயலாளர் எம்.பி. தண்டபாணி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கே.சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ். கார்த்திகேயன், எம்.பூவை, பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஆலபாக்கத்தில் துவங்கிய பிரச்சார பயணம் கீழ் பூவாணிக்குப்பம், மேல் பூவாணிக்குப்பம், அகரம், வெங்கடம்மாள்புரம், பள்ளி நீர் ஓடை, கோதண்டராமபுரம், கருமாச்சி பாளையம், வழுதலம்பட்டு, அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி ஆகிய 11 கிராமங்களில் நடை பெற்றது. தூக்கணாம்பாக்கம்  கடலூர் ஒன்றியம் பூசாரி பாளையத்தில் துவங்கி தூக்கணாம்பாக்கம் பகுதியில் நிறை வடைந்த பிரச்சார இயக்கத்தை சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர். ரவிச்சந்திரன், ஜே.ராஜேஷ் கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர். பஞ்சாட்சரம், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கே. சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைவாணன், எம்.கடவுள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.