tamilnadu

கழிவுநீரை முழுமையாக சுத்திகரிக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

சென்னை, பிப். 18- கழிவுநீர் சுத்திகரிக்க புதிய தொழில்நுட்பத்தை  சென்னையைச் சேர்ந்த இளம் முனைவோர் பி.கே. செந்தில்குமார் தொடங்கியுள்ள என்விரோநெஸ்ட் குளோபல் என்ற இந்திய நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பயோபைப் குளோபல்  கார்ப் என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, இந்தியா வில் கழிவு நீர் சுத்திகரிப்புப் பணிகளில் இந் நிறு வனம் ஈடுபட உள்ளது. கழிவு நீர் உற்பத்தியாகும் களத்தி லேயே செயல்படும்படி நிறுவப்படும் இதற்கான தொழில்நுட்பம் காப்புரிமை பெறப்பட்டதாகும். எந்தவித சத்தமும், துர்நாற்றமும் இல்லாமல், 100 சத வீதம் முழுமையான சுத்திகரிப்புப் பணியை இந்த  சாதனம் மேற்கொள்கிறது. இந்த பணி நிறை வில் திடக்கழிவுக்கான வாய்ப்பு முற்றிலும் இல்லை  என்பது  உறுதிசெய்யப்படும் என்று செய்தியாளர்க ளிம் பேசிய செந்தில்குமார் கூறினார். இந்த தொழில்நுட்பம் துருக்கி நாட்டில் இருந்து வந்துள்ளது. சிறிய அளவில் தேவையானாலும், அதற்கேற்ப வடிவமைத்து, முன்னதாகவே உள்ளூரில்  தயாரித்து கொண்டு சென்று உரிய இடத்தில் நிறுவப்ப டும் தொழில்நுட்பம் இது என்று அவர் தெரிவித்தார். இச்சாதனத்தின் பராமரிப்புச் செலவும் மிகவும் குறைவு. இந்தச் சாதனத்தில் இருந்து வெளியாகும் நீரைச் சுத்தம் செய்யவும், விவசாயத்திற்கும் பயன்ப டுத்தலாம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.