tamilnadu

img

அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு

அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24- வது அகில இந்திய மாநாடு நடப்பதை முன்னிட்டு விழுப்புரம் நகர கிளை உறுப்பினரும் முன்னாள் ராணுவவீரருமான வி.சேகர் அவரது துணைவியார் எஸ்.தமிழ்செல்வி குடும்பத்தினர் ரூ.25 ஆயிரத்தை  சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்தரனிடம் கட்சி நிதியாக அளித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன்,  செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், ஏ.சங்கரன்,ஜி.ராஜேந்திரன், ஆர்.மூர்த்தி, வட்ட செயலாளர் ஆர்.கண்ணப்பன், நகர செயலாளர் எம்.முருகன்,கிளை செயலாளர் என்.மேகநாதன், விதொச எஸ்.அபிமண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

சிதம்பரம் அருகே மதங்களைக் கடந்த மாசிமகம்

பட்ட முழக்குத்துறை கடற்கரைக்கு சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட  சாமி சிலைகள் மாசி மக திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும்  கொண்டுவரப்படும். இந்த நிலையில் வைணவ தளமாக விளங்கும் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி சிலையும் மாசி மகத்தை யொட்டி கிள்ளை கடற்கரைக்கு கொண்டு வரும்போது  கிள்ளை தைக்கால் பகுதியில் இஸ்லாமியர்கள் மேளதாளத்துடன் வர வேற்பது மதங்களை கடந்த மாசி மக திருவிழாவாக ஆண்டுதோறும் பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விழாவாக அமைகிறது.  இந்தஆண்டு கிள்ளையில் மார்ச் 12, 13,14 ஆகிய 3 நாட்கள் மாசிமகத்திருவிழா  நடை பெற்றது. இதில் 3-வது நாளானா 14-ந்தேதி  மகதிருவிழாவிற்கு பூவராக சாமி வருகை தந்தபோது  கிள்ளைதைக்காலில்  தர்கா அறங்காவலர் சையது சக்காப் தலைமை யில் இஸ்லாமியர்கள் மற்றும் கிள்ளை பேரூ ராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க பச்சஅரிசி, மாலை, தேங்காய், பழம் சீர் வழங்கி வரவேற்றனர்.  அதேபோல் பூவராக சாமி கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட பூமாலை மற்றும் நாட்டு சர்க்கரையை தர்கா நிர்வாகத்திடம் வழங்கினர்.  இதனை பெற்றுக்கொண்டு  மேள தாளத்துடன் சென்று அப்பகுதியில் உள்ள தர்காவில் வைத்து பாத்தியா ஓதி அனை வருக்கும் நாட்டு சக்கரை வழங்கப்பட்டது.  இதுகுறித்து கிள்ளை தர்கா அறங்காவலர்  சையதுசக்காப் கூறுகை யில், கடந்த 1892 ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்வை தொடர்ந்து கடைப்பிடித்து வரு கிறோம்.  அவர்கள் எடுத்துவரும் பிரசா தத்தை பெற்று பாத்திய ஓதி அனைவரும் சுபிட்சமாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்வோம்.  கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் கூறு கையில், இந்த தர்காவில் பல 100 ஆண்டு களாக மதங்களைக் கடந்த மாசிமகமாக இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட் டாகவும் ஒவ்வொரு ஆண்டும் அமைகிறது.  இதில் கிள்ளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நாங்கள் வரவேற்று அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.