‘தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர், ஜூன் 27- கூட்டுறவு நியாய விலைக்கடைகளுக்கு வரும் அரிசி, துவரம்பருப்பு, சர்க்கரை ஆகிய பொருட்கள், மூட்டைக்கு 2 கிலோ எடை குறைவாக வழங்கப்படுவதை தவிர்த்து, சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூன் 27), தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணி யாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் டோல்கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நியாய விலைக்கடைகளுக்கு சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும், புளூடூத் மூலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்க வேண்டும், முழு நேர கடைகள் மற்றும் பகுதி நேர கடைகளுக்கு புதிய ஒபிஎஸ் இயந்திரங்களை வழங்க வேண்டும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி கள் அதிகம் வேலை செய்வதால் பணிச் சுமையை கருத்தில் கொண்டு, எடை யாளர் ஒருவரை நியமிக்க வேண்டும், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும், பணியாளரின் சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும் போன்ற 8 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.எஸ்.தியாகராஜன், பொருளாளர் மா.பொன்னன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.