tamilnadu

img

வியட்நாம் விடுதலையின் 50 ஆம் ஆண்டு பெருவிழா

வியட்நாம் விடுதலையின் 50 ஆம் ஆண்டு பெருவிழா

வியட்நாம்  நாடு விடுதலைப் பெற்று 50 ஆம் ஆண்டு பெருவிழா உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற   விழாவிற்கு அகில இந்திய சமாதான ஒருமைபாட்டு கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் நாரா. கலைநாதன் தலைமை தாங்கினார். விழாவில் மதிமுக தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் மல்லை. சத்யா, சிபிஎம்  புதுச்சேரி மூத்தத் தலைவர் முருகன், மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், ஒருமைப்பாட்டு கழகத்தின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்  விழாவில் பங்கேற்றனர்.