tamilnadu

புதிதாக 500 அரசு பேருந்துகள் இயக்கம்

 சென்னை, ஜூலை 4- அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிதாக 500 அரசு பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை கோட்டையில் நடந்த விழாவில் சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்திற்கு 100 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத் திற்கு 150 பேருந்துகளும், விழுப்புரம் கழகத்திற்கு 10, சேலத்திற்கு 20, கோவைக்கு 30, கும்பகோணத்திற்கு 110, மதுரைக்கு 50, திருநெல்வேலி கழகத் திற்கு 30 பேருந்துகள் என மொத்தம் 500 புதிய பேருந்துகளை தொடங்கிவைத்தார். இதன் அடையாளமாக 7 பேருந்துகளை முதல்வர் கொடியசைத்து துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.