சென்னை, ஜூன் 7- சில்லறையாக மீன்களை வாங்க, காசி மேடு கடற்கரைக்குச் செல்லக்கூடாது என பொதுமக்களை அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'கொரோனா நோய்ப்பரவுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தனிமனித இடை வெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் இறங்கு தள பகுதிகளில், பொதுமக்க ளுக்கு மீன் சில்லறை விற்பனை செய்வது, ஞாயிற்றுக்கிழமை (ஜுன்7) முதல் தடை செய்யப்டபட்டுள்ளது எனினும், சில்லறை வியாபாரிகள் துறை முகப்பகுதியிலிருந்து மீன்களை வாங்கி, சில்லறை விற்பனைக்கென மீன்பிடித் துறை முகத்தின் வடக்குப் பகுதியில், புதியதாக உரு வாக்கப்பட்டுள்ள இடத்தில் அமைக்கப் பட்டுள்ள, சுமார் 200 கடைகளில் மீன்களை விற்பனை செய்யலாம். தற்போது மீன்பிடி துறைமுகப் பகுதி யில், சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மட்டும், இந்த புதிய இடத்தில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்படு வார்கள்.
மேலும், பொதுமக்கள் இந்த சில்லறை விற்பனை கடைகளில் மட்டுமே மீன் வாங்க அனுமதிக்கப் படுவார்கள். சில்லறை விற்பனை காலை 5 மணி முதல் காலை 11 மணி வரை மட்டுமே நடைபெறும். எக்கார ணம் கொண்டும் பொதுமக்கள் மீன் ஏலம் விடும் இடத்திலோ, இறங்கு தளத்திலோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது தவிர, படிப்படியாக சில்லறை விற்ப னையைப் பரவலாக்க என்டிஒ குப்பம் அரு கில் சில்லறை விற்பனைக்கென சுமார் 50 கடை களுடன் கூடிய தற்காலிக வசதிகள் அமைக்கப்படும். மேலும், இம்மாத இறுதியில் மீன்பிடித் துறைமுகத்தின் தெற்குப் பகுதியி லுள்ள 145 கடைகள் அடங்கிய சில்லறை மீன் விற்பனை நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்ற பின்பு, அங்கும் தற்காலிக சில்லறை விற்பனை நிலையத்திலுள்ள வியா பாரிகள் மேற்படி விற்பனை நிலையத்தி லும் மீன்விற்பனை செய்ய அனுமதிக்கப்படு வார்கள்.
பொதுமக்கள் மீன்பிடி துறைமுகத்திற்கு, மீன் வாங்க செல்வதைத் தவிர்த்து, சில்லறை விற்பனைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மீன் வாங்கவும், கூட்டம் கூடாமல் தனிநபர் இடை வெளியை முறையாக கடைப்பிடிக்கவும், தவ றாமல் முகக் கவசம் அணிந்து கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தங்களை தற்காத்து கொள்ளவும் ஒத்துழைக்க வேண்டும். மீன்பிடித் தடைக்காலம் முடிவு பெற்ற தைத் தொடர்ந்து, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகு கள் ஜூன் 15ஆம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவிருக்கின்றன. இதனால் மீன்பிடித் துறைமுகத்தில் அதிக அளவிலான மீன் வரத்து இருக்கும். மேலும் கடந்த வாரம் காசிமேடு கடற்கரை யில் அதிக கூட்டம் இருந்த காரணத்தால் தற்போது ஜூன் 7 முதல் காசிமேடு மீன் இறங்கு தளத்தில் மீன்கள் வாங்கவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.