tamilnadu

img

திருவண்ணாமலை தேர்தல் களத்தில் 16,593 வேட்பாளர்கள்

திருவண்ணாமலை,டிச.20- திருவண்ணாமலை மாவட்டம் தேர்தல் களத்தில் மொத்த பதவி யிடங்கள் 7442. இதற்காக, 22,150 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.  இதில் 241 மனுக் கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 3723 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டது. 1594 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராம வார்டு உறுப்பினர் பத விக்கு, யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இறுதி கட்ட மாக 16,593 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இரண்டு கட்ட மாக பதிவு செய்யப்படும் வாக்குகள்  ஜனவரி 2 ஆம் தேதி, 18 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு கள் எண்ணப்படுகிறது.

சிபிஎம் வேட்பாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டத் தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக கூட்டணியில் செங்கம்,  போளூர், கலசபாக்கம்,  துரிஞ்சாபுரம்  ஆகிய ஒன்றியங்களில் 4 ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பேட்டியிடு கின்றனர். மேலும், 10 இடங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பத விக்கும், 60 இடங்களில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டி யிடுகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் பகுதிகளில், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

286 பதற்றமான வாக்குச்சாவடிகள்

திருவண்ணாமலை மாவட்டத் தில் 34 மாவட்ட கவுன்சிலர்  பதவி யிடங்களுக்கும், 341  ஒன்றியக் குழு  உறுப்பினர்  பதவியிடங்க ளுக்கும், 860  ஊராட்சி மன்றத் தலைவர் பதவி யிடங்களுக்கும் மற்றும் 6207 கிராம  வார்டு உறுப்பினர் பதவியிடங்க ளுக்கும் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக, டிச 27 அன்று,  திருவண்ணாமலை, கீழ்பென்னாத் தூர், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு செய்யார், அனக்காவூர், வெம்பாக் கம், தெள்ளார், பெரணமல்லூர் ஆகிய ஒன்றியங்களில் நடைபெறு கிறது. இரண்டாம் கட்டமாக, டிச.30  அன்று, போளுர், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, செங்கம், புதுப்பாளை யம், ஜவ்வாதுமலை, வந்தவாசி, ஆரணி, மேற்கு ஆரணி ஆகிய ஒன்றி யங்களிலும் மொத்தமுள்ள 3520 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில், 8,05,233 ஆண் வாக்காளர்களும், 8,21,899 பெண் வாக்காளர்களும், 78 மூன்றாம் பாலின வாக்காளர்களுமாக,  மொத்தம் 16,27,210 பேர் வாக்க ளிக்க உள்ளனர்.   தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து தேர்தல் பார்வையாளரின் 96777 78184 கைபேசி எண்ணில் தெரி விக்கலாம். மேலும், 24 மணி நேரமும்  செயல்படும் வகையில் தேர்தல் கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. கட்டணமில்லா தொலை பேசி 1800-425-3678 மற்றும் 04175-233303 ஆகிய எண்களில் தொடர்பு  கொண்டு புகார்களை தெரிவிக்க லாம். இதேபோல், 18 ஊராட்சி ஒன்றி யங்களில் 18 பறக்கும்படை அமைக்  கப்பட்டு 24 மணி நேரமும் கண் காணிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.