செங்கல்பட்டு,மார்ச் 12- மாணவர்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளியின் மேற்கூரையை உடனடியாக மாற்ற வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட மையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 32 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இரண்டு ஆசிரி யர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்த பள்ளி கடந்த 2015ஆம் ஆண்டு வரை ஓடுகளால் ஆன கட்டடத்தில் செயல் பட்டுவந்துள்ளது. 2015ஆம் ஆண்டு பெய்த பெரு மழையில் பள்ளியின் மேற்கூரை முற்றி லுமாக சேதமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளியினை தொடர்ந்து நடத்திட தற்காலிகமாக தகரத்தால் ஆனை மேற்கூரையை அமைத்துள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளியில் பயிலும் குழந்தை கள் வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியா மல் அவதிப்பட்டுவருகின்றர். மேலும் சில குழந்தைகளுக்கு வெப்பம் தாங்க முடியாத தால் அடிக்கடி மூக்கில் ரத்தம் வருவதாகக் கூறப்படுகின்றது. பள்ளி ஆசிரியர்கள் அவ்வாறு ரத்தம் வரும் குழந்தைகளை அரு கில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துவருகின்றனர். இதனால் பள்ளியின் மேற்கூரையை உடனடியாக மாற்றித் தர வேண்டும், அல்லது புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. இதுகுறித்து பெற்றோர்களிடம் கேட்டபோது பள்ளி மேற்கூரை தகரத்தால் அமைக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்குள் வெப்பம் அதிக அளவில் உள்ளது. இதனால் எங்களின் குழந்தைகளின் உடல்நலம் பாதிப்புக்குள்ளாகின்றது. வெப்பத்தின் தாக்கத்தால் குழந்தைகளின் மூக்கில் ரத்தம் வருகின்றது. மாவட்ட நிர்வாகம் உடனடி யாக பள்ளியின் மேற் கூரையை உடனடி யாக மாற்றித்தரவேண்டும் என்றனர்.