மதுராந்தகத்தில் விஷச் சாராயம் விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த செங்கல்பட்டு மாவட்ட பாஜக ஓபிசி அணித் தலைவர் விஜயகுமார் கைது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் விஷச் சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த நிலையில் விஷச் சாராயத்தை வாங்கி விற்பனை செய்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான செங்கல்பட்டு மாவட்ட பாஜக ஓபிசி அணித் தலைவர் விஜயகுமார் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவாக இருந்த விஜயகுமாரிடமிருந்து 138 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.