பாட்னா,
பீகாரில் மழை பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது.
பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள 13 இடங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளது. இந்நிலையில் பீகாரில் வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அசாமை பொறுத்த மட்டில் 864 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 417 முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் 88 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.