சென்னை, நவ.30- தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளு நர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்ட முடி வின்படி தமிழகம் முழுவதும் அனைத்து மருந்தாளுநர்களும் நவ.29 முதல் டிச.2 வரை நான்கு நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிகின்றனர். 1945 மருந்தியல் சட்டம் ஷெட்யூல் முறை யினை (மருந்தை மருந்தாளுநர்கள் மட்டுமே கையாளவேண்டும்) மத்திய அரசு திருத்தம் செய்வதினை கைவிட வலியுறுத்தி மருந்தா ளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி புரிகின்றனர். அதாவது மருத்துவத் துறை யில் மருந்தியல் கல்வி அறிவு பெற்ற மருந்தாளுநர்களைக் கொண்டு மட்டுமே மருந்துகளைக் கையாளுவது மக்கள் நல னுக்கு உகந்தது. ஆனால் மத்திய அரசு 1945 மருந்தியல் சட்டம் ஷெட்யூல் முறையினை திருத்தம் செய்வதால் மருந்தியல் கல்வி அறிவு இல்லாதவர்களும் மருந்துகளைக் கையாளும் நிலை மக்களுக்கு மிகவும் ஆபத்தானது.
தமிழக அரசு 1948 மருந்தியல் சட்டப்படி மருந்துகளை வழங்கும் மற்றும் கையாளும் பணிகளை மருந்தாளுநர் களை கொண்டு மட்டுமே செய்திட வேண்டும். ஆனால் 1948- மருந்தியல் சட்டத்திற்குப் புறம்பாக மருந்தி யல் கல்வி அறிவு இல்லாதவர்கள் மூலம் தொற்றா நோய் பிரிவு மருந்துகளை (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி களுக்கான) துணை சுகாதார மையங்களில் வழங்குவதினை கைவிட்டு , மக்கள் நலன் கருதி துணை சுகாதார மையங்களில் தொற்றா நோய் பிரிவு மருந்துகளை வழங்கும் பணிக்கு மருந்தாளுநர்களை பணி யமர்த்திட வேண்டும். அரசு மருத்துவமனைகள்,ஆரம்பச் சுகா தார நிலையங்களில் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 700க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்கள் காலி யாக உள்ளதினை மக்கள் நலன் கருதி தமி ழக அரசு உடனடியாக காலியாகவுள்ள மருந் தாளுநர் பணியிடங்களை நிரப்பிடவேண்டும்.தமிழக அரசு சங்க நிர்வாகிகள் மீதான பழி வாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்திட வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் இதில் வலியுறுத்தப்பட்டன..
சுகாதாரத்துறை செயலாளர் தலைமை யில் 2018 ஆண்டு ஜனவரி 3 மற்றும் 2018 மே 22 ஆம் தேதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் மீது அரசாணை வழங்கிட வலியுறுத்தியும் தமிழ கம் முழுவதும் பணியாற்றும் அனைத்து மருந்தாளுநர்களும் கோரிக்கை அட்டை அணிந்து மாநிலம் முழுவதும் பணிபுரிவதாக மாநிலத்தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் உ.சண்முகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.