tamilnadu

img

ஒருநாள் ஊதியம் வழங்க பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

சென்னை, மார்ச் 28- கொரோனாவின்  கொடுமையான தாக்குதல் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வேலையின்றி தவிக்கும் முறைசாரா தொழிலாளர்களுக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க பட்டதாரி ஆசிரியர்கள் முடிவுசெய்துள்ளனர்.

தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்  பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன், மாநிலத் தலைவர் எஸ்.பக்தவச்சலம், பொதுச் செயலாளர் எஸ்.சேது  செல்வம், பொருளாளர் சி.ஜெயக்குமார் ஆகியோர்  விடுத்துள்ள ஒரு அறிக்கையில் இந்த தகவலை  தெரிவித்துள்ளனர். இம் மாத இறுதியில் வழங்கப்படும் ஊதி யத்தில் இருந்த இதற்கான தொகையை பிடித்தம்  செய்து கொள்ளுமாறு தமிழக அரசுக்கு பட்ட தாரி ஆசிரியர் கழகம்  தெரிவித்துள்ளது.