tamilnadu

அரசாணைப்படி ஊதிய உயர்வு: மருத்துவர்கள் கோரிக்கை

சென்னை, ஜூலை 13- மருத்துவர்களின் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வேண்டு மென்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்து வர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி மரு. சா. பெருமாள் பிள்ளை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தான் அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே  குறை வான ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு முதல்வரின்  வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை திரும்ப பெற்றோம்.  இருப்பினும் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேறவில்லை. 2009ல் நிதித் துறையின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அர சாணை எண் 354ன் படியே ஊதியம் கோருகிறோம். இதனை  செய்தால் அரசுக்கு மாதம் 20 கோடி ரூபாய் மட்டுமே கூடுதல்  செலவு ஏற்படும். தமிழக அரசு மருத்துவர்கள், பிற மாநிலங்களை விட 50  ஆயிரம் ரூபாய் வரை குறைவான ஊதியம் பெருகின்றனர். கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க மருத்துவர்கள் உயிரை கொடுத்து பணியாற்றுகிறோம். ஆனால் உரிய ஊதி யத்தை தர அரசு மறுப்பது வேதனை அளிக்கிறது. எனவே,  தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஜூலை 14 அன்று நடைபெறு கிறது. இந்தக்கூட்டத்தில், மருத்துவர்களின் ஊதியம் குறித்து  விவாதித்து முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.