tamilnadu

img

கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு

கொடைக்கானல்,ஜூலை 30- கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டு க்கு புவிசார்குறியீடு வழங்கப் பட்டுள்ளது. கொடைக்கானலில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் மற்றும் தமிழக அறிவியல்- தொழில்நுட்பத் துறை சேர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மருத்துவக் குணம் கொண்ட கொடைக் கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கோரி மத்திய அரசுக்கு விண்ணப் பித்திருந்தன.  இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த மத்திய அரசு, தற்போது மலைப்பூண்டின் மகத்துவத்தை தெரிவிக்கும் வகையில் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. ஆன்டி ஆக்சிடன்ட் போன்ற மருத்துவ குணம் மிக்க கொடைக்கானல் மலை ப்பூண்டில், பிற பூண்டுகளை விட அதிக ஆர்கனோசல்பர் கலவைகள், பினோல்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. தலைவலி, ஆஸ்துமா, சோர்வு, உடல் வலி, வாயு, அஜீரணம் உள்ளிட்ட பல்வேறு சிகிச் சைக்கு இவை சிறந்தது என்பதுடன், சமையலுக்கு நல்ல நறுமணத்தையும் சுவையையும் அளிக்கக் கூடியது.  மஹாராஷ்டிரா, கர்நா டகாவுக்கு அடுத்தபடியாக, 28 பொருட்களுடன் அதிக புவிசார் குறியீடுகளைக் கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு ஆகும்.