tamilnadu

img

திப்புவின் வாரிசுகளுக்கு எட்டப்பன் வாரிசுகள் குடியுரிமையை மறுப்பதா?

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆவேசம்


கோயம்புத்தூர், பிப்.22–  இந்திய விடுதலை போராட்டத் தில் காட்டிக்கொடுத்த ஆர்எஸ்எஸ், எட்டப்பன் வாரிசுகள் இஸ்லாமி யர்களின் குடியுரிமையை மறுப்பதா என கோவையின் ஷாகின்பாக் போராட்டத்தில் பி.சம்பத் ஆவேச மாக கேள்வி எழுப்பினார். கோவை ஆத்துபாலம் பகுதி யில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி அனைத்து ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வரு கின்றன. கோவையின் “ஷாகீன் ஃபாக்” போராட்டம் என்கிற பெயரில் நடைபெற்று வரும் இப்போராட்டம்  4வது நாளாக எழுச்சியோடு நடை பெற்று வருகிறது. இதில் ஆயி ரக்கணக்கான மக்கள் தொடர்பு இருப்பு போராட்டம் நடத்தி வருகி றார்கள். நான்காவது நாளான சனி யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் என்.ஜெயபாலன், கே.மனோ கரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் இந்த தொடர் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.  அப்போது பி.சம்பத் பேசுகை யில், இந்த போராட்டத்தைபொறுத்த வரை மிக பரவலானமுறையில் நூற் றுக்கணக்கான இடங்களில் மக்கள் பங்கேற்று போராடிக்கொண்டிருக்கி றார்கள். இந்த போராட்டம் ஏதே இஸ்லாமியர்களுக்கான போராட் டம் என்று யாராவது கருதுவார்களே ஆனால் அது மிகப்பெரிய தவறு. இது இந்திய நாட்டின் இறையாண் மையை, தேசத்தின் அரசியல் சட்டத்தை, மதச்சார்பின்மையை பாதுகாக்கிற போராட்டம். இதை இஸ்லாமியர்கள் முன்னின்று நடத்தி வருகிறார்கள். ஆனால் பாஜக விற்கு இதைப்பற்றி அக்கறை யில்லை என்பது மட்டுமல்ல, அரசி யல் சட்டத்திற்கு எதிராக செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

இவர்கள் கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தில் இஸ்லாமி யர்களுக்கு இடமில்லையாம். இந்தியாவில் 18 கோடிப்பேர் இஸ்லா மியர்கள் உள்ளனர். இந்திய நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் இணைந்து செயல்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். ஆனால் இந்த சங்பரிவார ஆஸ்எஸ்எஸ் கும்ப லுக்கு விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற எந்த பாரம்பரியமும் இல்லை. இங்கே நடைபெறும் இந்த போராட்டத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல இந்துக்களும் இதர பிரிவு மக்களும் கூடியிருக்கின்றனர். 

ஆங்கிலேயனை எதிர்த்த போராட்டத்தில் சிங்கமாய் கர்ஜித்து நின்றவன் திப்பு சுல்தான். இந்தியா வில் உள்ள இஸ்லாமியர்கள் திப்பு சுல்தானின் வாரிசுகள். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகள். ஆனால் சங்பரிவார் வாரிசுகள் இந்திய விடுதலையை காட்டிக்கொடுத்த எட்டப்பனின் வாரிசுகள். இவர்கள் இஸ்லாமிய மக்களின் குடியுரிமை குறித்து பேசு வதற்கு எந்த உரிமையும் இல்லை. ஆர்எஸ்எஸ், பாஜக கும்பலுக்கு தேசபக்தி குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லாதவர்கள்.  இவர்கள் இந்திய அரசியல் சட்டத்தை மட்டும் சீரழிக்க வில்லை. இந்திய நாட்டின் பொரு ளாதாரத்தையே நொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்து செல்லும் நோட்டை செல்லாத நோட்டாக மாற்றினார் கள். இப்போது கோடான கோடி இந்திய மக்களை செல்லாத மக்களாக மாற்ற துடித்துக்கொண்டி ருக்கிறார்கள். இதனை ஒருபோதும் இந்திய நாட்டின் ஜனநாயக இயக் கங்கள் ஏற்காது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியதாக பாஜகவினர் தம்பட்டம் அடித்தது. இந்த குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக முதன்முத லில் ஒலித்த கேரள மாநிலத்தில் இடது சாரிகள் ஆட்சி செய்யும் முதல்வர் பினராயி விஜயனின் குரல். இப்போது இந்தியாவில் உள்ள 13 மாநிலங்கள் இந்த சட்டத்தை ஏற்கமாட்டோம் என வெளிப்படையாக அறிவித்துள்ளன. இதனையும் மீறி எப்படி உங்களால் இதனை நடைமுறைப்படுத்த முடியும்.

என்பிஆர் மூலம் கணக்கெடுத்து விட்டு அதனை என்சிஆருக்கு பயன் படுத்தலாம் என கணக்கு போட்டது மோடி அரசு. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களை கொண்டு தானே எடுப்பீர்கள். எங்கள் மாநி லத்தில் எந்த ஒரு அரசு ஊழியரும் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட மாட்டார்கள் என பகிங்கரமாக அறிவித்தவர் பினராயி விஜயன். இதுமட்டுமல்லாமல் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி என்பிஆர் கணக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்தவர். 

இந்தியாவில் 13 மாநிலங்கள் இந்த சட்டத்திற்கு எதிரான நிலைப் பாட்டை உறுதியாக மேற்கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள எடப்பாடி தலைமையிலான அரசு இச்சட்டத்தால் இஸ்லாமி யர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறது. நாங்கள் சொல்கிறோம் இது எடப்பாடியின் குரல் அல்ல. இது சங்பரிவாரின் குரல், ஆர்எஸ்எசின் குரல் என்று குற்றம்சாட்டுகிறோம்.  தில்லியில் நடைபெறும் ஷகின்பாக் போராட்டத்தின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஷாகின்பாக் போராட்டங்கள் எழுச்சியோடு துவங்கியிருக்கின்றன. இதன் ஒருபகுதியாகத்தான் கோவையிலும் இந்த போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்திய வர லாற்றில் இத்தகைய போராட்டம் நடைபெற்றதில்லை. பல நாட்கள் தேசம் தழுவிய அளவில் இந்த போராட்டம் தொடர்கிறது என்றால் அது மோடி அரசின் நாசகர குடி யுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான இந்த போராட்டம்தான்.  இந்தப் போராட்டத்திற்கு புதிய சக்திகள் இணைந்து கொண்டிருக்கி றார்கள். நாளுக்கு நாள் இந்த போராட் டங்கள் வலுமிக்கதாக மாறி வரு கிறது. இப்போது மோடி, அமித்ஷா வகையறாக்களுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாமி யர்கள் தனித்து இல்லை. இடதுசாரி களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் முழுமையாக உடன் நிற்கி றோம். ஜனநாயக இயக்கங்கள், மதச்சார்பற்ற இயக்கங்கள் இப்போ ராட்டத்தில் இணைகிறார்கள். இச்சட்டத்தை தூக்கி வங்காள விரிகுடா கடலில் வீசும்வரை நமது போராட்டம் ஓயப்போவதில்லை. மேலும் இப்போராட்டத்தை விரிவு படுத்துவோம் என்றார்.  முன்னதாக போராட்டத்தில் ஈடு பட்டவர்களுக்கு தலைவர்கள் கரம் குலுக்கி ஆதரவையும், வாழ்த்துக் களையும் தெரிவித்தனர்.