தேனி. மே 2- போடியில் இட்லி விற்கும் பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப் பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 43பேர் வரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். போடியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்ற அனைவரும் வெள்ளியன்று குண மடைந்து வீடுதிரும்பினர். இதனால் கொரோனா இல்லாத மாவட்டமாக தேனி மாறியது.
மேலும் கடந்த மாதம் 17-ம் தேதி முதல் எவ்வித புதிய தொற்றும் இல்லாத தால் தேனி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறியது. இந்நிலையில் சனிக்கிழமை போடியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர் போடி அரசு மருத்துவமனை அருகில் இட்லி கடை வைத்துள்ளார். பாதிப்புடைய அனைவரும் குணமடைந்த நிலையில் 14நாட்களுக்குப் பிறகு தேனி மாவட்டத்தில் புதிய தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 6பேருக்கும் ரத்தமாதிரி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கடை யில் நகராட்சி, மருத்துவமனை ஊழியர்கள் பலரும் சாப்பிட்டு உள்ளனர். எனவே அவர் களையும் கண்டறிந்து ரத்த மாதிரி எடுக்கும் பணியில் மருத்துவத்துறை ஈடுபட்டுள்ளது.