பேசும் காச்சக்காரம்மன் – 3 சென்ற வாரத் தொடர்ச்சி
உடலின் உள்ளே கிருமியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் நமக்கு எதுவுமே தெரியாயதைப்போல ஷோபாவில் அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது நமது உடலின் வெப்பநிலை எப்போதும்போல 98.6° Fதான் இருக்கும். ஆனால் 105° F உள் மைய வெப்ப நிலைக்கு ஏற்ப உடனடியாக உடலை தகவமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டதால் இப்போது உடலில் அவசர கதியாக சில வேலைகள் நடக்கத் துவங்குகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் காய்ச்சலின் முதல் அறிகுறியாக உங்களுக்கு உடல் குளிர்வதைப் போன்ற தோற்றத்தையும், நடுக்கத்தையும் வரவழைக்கிறது, ஹைப்போதலாமஸ். ஹைப்போதலாமஸ் சொன்னால் ஹைக்கோர்ட்டே சொன்ன மாதிரித் தான். அரசாங்கம் மாதிரியெல்லாம் அசால்டாக வேலை செய்ய முடியாது. உடனே உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதற்கு உடலிலுள்ள எல்லா செல்களையும் அழைத்துப்பேசி சில கோரிக்கைகளை முன்வைத்து முக்கியமான இரண்டு தீர்மானங்களைப் போடுகிறது. ஒன்று உடலிலிருந்து வெப்பம் வெளியேற விடாமல் தடுத்து வெப்பத்தை அதிகரிப்பது, மற்றொன்று உடம்பிலேயே அதிக வெப்பத்தை உற்பத்தி செய்வது. இப்படியாக வெப்பத்தை சேமித்துக் கொண்டு உடலின் வெப்பநிலையை உள் மைய வெப்பநிலைக்கு நிகராக உயர்த்துவதுதான் தற்போதைய வேலை. சரி, இப்போது தீர்மானம் நிறைவேறியாகிவிட்டது. இதற்கான செயல் திட்டங்கள் என்னென்ன, அதை யாரெல்லாம் செய்யப் போகிறார்கள் என்பதற்கான வழிமுறைகளை நமது உடல் ஏற்கனவே வகுத்து வைத்திருக்கிறது.
உடலின் மைய வெப்பநிலை உயர்த்தப்பட்டதன் விளைவாக உடனடி நடவடிக்கையாக முதலில் உடல் குளிரு வதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உடம்பை சிலிர்த்துப் போகிச் செய்கிறது. அதாவது தோலிலுள்ள முடியெல்லாம் நட்டுக்கொண்டு புல்லரிப்பதைப் போன்று தோன்றுகிறது. இவையெல்லாம் தன்னிச்சை நரம்பு மண்டலம்(ANS) வழியாக தோல் முடியின் அடிப்பகுதியி லுள்ள அரெக்டார் பைலை என்கிற சிறிய தசையை உட லெங்கிலும் தூண்டிவிடப்படுவதன் மூலமே நடைபெறு கிறது. அரெக்டார் பைலை தசையின் இயக்கத்தினால் முடிகள் நிமிர்ந்து கொண்டு நட்டமாய் நிற்க ஆரம்பிக்கி றது. இப்போது தோல்களைச் சுற்றிலும் முடிகள் நட்டுக் கொண்டு இருப்பதால் அது பறவைகளில் தனது வெப்ப நிலையை தக்க வைத்துக் கொள்கிற முறையைப் போல செயல்பட ஆரம்பிக்கிறது. அதாவது பறவைகள் இறக்கைகளை ஒடுக்கி வைத்துக் கொள்வதன் வழியே உடலிலிருந்து வெப்பம் வெளியேறிவிடாதவாறு தற்காத்துக் கொள்கிறது. அதனால்தான் பறவைகளின் இறக்கைகளுக்குள்ளே தொட்டுப் பார்க்கையில் சூடாக இருக்கிறது. சில சம யங்களில் பறவைகள் உடல் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள இறக்கைகளை விரித்துக் கொள்ளவும் செய்கி றது. இப்படியாக மனித உடலும் முடியை நிமிர்த்தி தோலைச் சுற்றிலும் ஒரு வளையத்தை உருவாக்குவதன் வழியே உடலுடைய வெப்பம் வெளியேறாதவாறு பார்த்துக் கொள்கிறது. அதன் வழியே உடலின் வெப்ப நிலையை உள் மைய வெப்பநிலை நோக்கி உயர்த்துவ தற்கான வேலையைச் செய்கிறது.
காய்ச்சல் வந்தவர்கள் சில நேரங்களில் தண்ணீரில் விழுந்து எழுகிற பறவையைப்போல உடலைப் போட்டு உலுப்பிக் கொண்டு நடுங்கிக் கொண்டிருப்பார்கள். ஆம், இதற்கும் ஹைப்போதலாமஸ்தான் காரணம். உள்நுழைந்த கிருமியைக் கொல்வதற்காக உள் மைய வெப்பநிலையை தான் உயர்த்திவிட்ட சிக்னலை ஒவ் வொரு முறையும் ஹைப்போதலாமஸ் அனுப்புகிற போதெல்லாம் உடம்பிலுள்ள தசைகளெல்லாம் விழுந்த டித்துக் கொண்டு நொடிப் பொழுதில் சுருங்கி விரிகின்றன. இப்படி ஒரே சமயத்தில் நம்முடைய உடலிலுள்ள அத்தனை தசைகளும் சுருங்கி விரிவதன் விளைவு தான் நடுங்கம் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள லாம். இப்படியான நடுக்கத்தை உருவாக்குவதன் வழியே தசைகளிலிருந்து அதிகப்படியான வெப்பத்தை கண நேரத்தில் உடல் உற்பத்தி செய்து உள் மைய வெப்ப நிலைக்கு ஏற்ப சமன் செய்து கொள்கிறது. இதுபோன்ற மூளையின் தந்திர வேலைகளை தெரியாமல்தான் நாமும் அப்பாவியாய் போர்வைப் போர்த்திக் கொண்டு பனியில் உட்கார்ந்திருப்பதைப்போல பற்களை பெல் அடித்துக் கொண்டும் இருக்கிறோம். அடுத்ததாக தோல்களுக்கு அடியிலுள்ள மெல்லிய இரத்தக் குழாய்களையெல்லாம் தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் வழியே தூண்டச் செய்து சுருங்கச் செய்கி றது. உதாரணமாக, காலில் ஏதேனும் அடிபட்டவுடன் தொட்டுப் பார்த்தால் அடிபட்ட இடம் கன்னிப்போய் சூடாக இருக்கும். அதற்கு அடிபட்ட இடத்தை சரிசெய்ய அங்குள்ள இரத்தக் குழாய்களெல்லாம் விரிவடைந்து அந்த இடத்தை நோக்கி இரத்த ஓட்டம் அதிகரிப்பதுதான் கார ணம். ஆக, நோயாளிகளுக்கு இரத்தக்குழாயை சுருக்கிக் கொள்வதன் வழியே தோலிற்கு செல்கின்ற இரத்த ஓட்டத்தை மெதுவாக்கி, அத்தகைய இரத்தஓட்டம் வழியே வெளியேறவிருந்த வெப்பத்தை உள்ளே தக்க வைத்துக் கொள்கிறது. இதனால் தான் காய்ச்சல் வந்தவர்களின் கைகள், பாதங்களை தொட்டுப் பார்க்கையில் சரியாக இரத்த ஓட்டம் செல்லாமலும், அதனால் வெப்பமூட்டப்படா மலும் குளிராக இருக்கிறது.
அதே சமயத்தில் உடலின் வெப்பநிலையை இன்னும் அதிகரிக்க வேண்டி தைராய்டு போன்ற ஹார்மோன்க ளும் சுரக்க ஆரம்பிக்கிறது. இந்த தைராய்டு ஹார்மோன் கள்தான் உடலின் எல்லா செல்களையும் துரிதமாக வேலை செய்ய வைக்கிற சாட்டை. ஹைப்போதலாமஸ் தைராய்டு ஹார்மோனை வைத்து சாட்டையை ஒரு சுழற்று சுழற்றியவுடன் எல்லா செல்களும் பதறியடித்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. இதன் விளைவாக ஒவ்வொரு செல்லும் வெளிவிடுகிற வெப்பத் தால் உடலின் சூடு அதிகமாகிறது. உடல் சூட்டை உயர்த்து வதற்காக எல்லா செல்களும் சுழன்றடித்து வேலை செய்து உடம்பில் இருக்கிற எனர்ஜியையெல்லாம் காலி செய்து விடுவதால்தான் காய்ச்சல் வந்தவர்களின் உடல் பலவீன மானவர்களாகவும், அசதியாகவும் தோன்ற ஆரம்பிக்கி றது. காய்ச்சல் காரணமாக பசியும் சரியாக எடுக்காத நிலையில் காய்ச்சல் வந்தவர்கள் தீர்ந்துபோன எனர்ஜியை திரும்ப நிரப்பவும் முடியாமல், பசியில்லாததால் எதை யும் சாப்பிடவும் முடியாமல் அல்லல்பட்டுக் கொண்டி ருப்பார்கள். இதனால்தான் மருத்துவர்கள் பசியே எடுக்கா விட்டாலும்கூட ஏதாவது சத்தான ஆகாரமாக சாப்பிட்டுக் கொண்டே இருங்கள் என்று அறிவுறுத்தியபடியே இருக்கிறார்கள். காய்ச்சல் வந்தவர்கள் மருத்துவமனைக்கு வருகை யில் போர்வையைப் போர்த்திக் கொண்டு, ஸப்பா.. ஒரே குதுகுதுன்னு வருது! என்று சொல்லிக் கொண்டி ருப்பார்கள். நாம் தொட்டுப் பார்க்கையில் காய்ச்சல் வந்து கொதித்துக் கிடக்கையில் அவர்களுக்கு மட்டும் ஏன் குளிர்வதைப் போன்று தெரிகிறது என்று சந்தேகம் தோன்ற லாம். ஆனால் அதற்கும் காரணம் இருக்கிறது. அதாவது திடீரென்று உடலின் உள் மைய வெப்பநிலை அதிகமாக உயர்த்தப்பட்டதால் நமது உடலின் சாதாரண வெப்பநிலை யிலும்கூட உடல் குளிர்ந்துவிட்டதைப் போன்ற போலி யான தோற்றத்தை அது ஏற்படுத்திவிடுகிறது. இதன் கார ணமாகத்தான் காய்ச்சல் வந்தவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஒருசிலருக்கு கிருமித்தொற்று இருந் தும்கூட உடம்பில் காய்ச்சல் இல்லாமல் ஒடம்பெல்லாம் குளுரடிக்குது, ஒரு மாதிரியா கனகனன்னு இருக்குது என்று சொல்வதற்கும் இதுவேதான் காரணம்.
மேலும் இந்த சமயத்தில்தான் மூளை மாயாஜால மந்திரவாதியைப்போல நம்முடைய மனதை கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறது. அதாவது மழை பெய்கையில் சூடா ஒரு காப்பி சாப்பிடலாம் போல இருக்கு; இந்த குளிருக்கு வெந்நீர் வச்சு குளிச்சாத்தான் நல்லாருக்கும் என்பதைப் போன்ற உடல் வெப்பநிலைக்கு ஏற்ப மனோபாவத்தை நமக்குத் தூண்டிவிடுகிறது. அதனால்தான் போர்வை யைப் போர்த்திக் கொண்டால் சுகமாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் வழியே மூளை நமது உடலின் வெப்பம் வெளியேற விடாமல் தடுத்து சேமித்து கொள்கிறது. ஒருசில காய்ச்சல் வந்தவர்கள் சாயுங்காலத்தில்தான் ஒடம்பு கதகதன்னு இருக்குற மாதிரி இருக்கு என்று சொல்வார்கள். அதற்கும் ஒரு அறிவியில் காரணமிருக்கி றது. நம்முடைய உடலில் அதிகாலை எழுகையில் 98.6° F ஆகவும் மாலையில் 99.6° F ஆகவும் என உடலின் வெப்பநிலையில் ஒரே நாளில் 1° F அளவு மாறுபடுகிறது. இதற்கு நம்முடைய ஹைப்போதலாமஸிலுள்ள சுப்ராக யாஸ்மேட்டிக் நியூக்லியஸ் என்கிற உயிரியல் கடிகாரம் (Biological Clock) தான் காரணம். இதனால் இயல் பாகவே காலை நேரத்தைவிட மாலை நேரத்தில் நமது உடலின் வெப்பநிலை அதிகமாகத்தான் இருக்கும். எனவேதான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு மாலை நேரத்தில் கூடுதலாக காய்ச்சலடிப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இவ்வாறு கிருமி உள்நுழைந்து அதற்கு எதிராக போர்படை வீரர்கள் சண்டையிட்டு போர் முடிகின்ற காலம் வரை இப்படியாக உடலின் உள் மைய வெப்பநிலை மாற்றி மாற்றி அமைக்கப்படுவதும், அதற்கேற்ப மறு படியும் உடல் வெப்பநிலையை குறைக்கவோ அதிக ரிக்கவோ செய்ய தோல்களும், இரத்தக்குழாய்களும், ஹார்மோன்களும் வேலை செய்ய போராடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த கண்ணாம்பூச்சி விளையாட்டையெல்லாம் ஏதா வது ஒரு சமயம் நிறுத்தி வைக்கத் தானே வேண்டும்? பூனைக்கு யாராவது மணியைக் கட்ட வேண்டாமா? எல்லாம் சரிதான். நம்முடைய உடலிலேயே நோய் எதிர்ப்பு சக்திகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் வெளிநாடுகளிலிருந்து சிப்ஸ், கோகோ கோலா போன்றவை இறக்குமதியாவதைப் போல மோசமான நோய்க்கிருமிகளும் நம் நாட்டுக்குள்ளாக பாதிக்கப்பட்ட வர்கள் நுழைவதின் வழியே புதிது புதிதாக வந்து விட்டதே. தலைமுறை தலைமுறையாக முன்னோர்களால் நமக்கு போராடி கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மரபணு ஓலைச்சுவடிகளில் எப்படித் தேடிப்பார்த்தாலும் புதிய நோய்களுக்கான குறிப்புகள் ஏதுமில்லையே. இத னால் அத்தகைய புதிய கிருமிகளுக்கெதிராக உடலும் முடிந்த அளவில் போராடிப் பார்த்து முடியாத பட்சத்தில் மரணத்தின் விளிம்பில் போய் தவிக்க வேண்டியி ருக்கிறது.
இத்தகைய இடத்தில்தான் அல்லோபதி மருத்து வம் மனித சமுதாயத்திற்கு கைகொடுக்கிறது. நோய் வந்த வர்களை சாத்தான் பிடித்திருக்கிறது என்று கொன்றுக் குவித்த உலகத்தில் அது நோய்கிருமியால் தான் ஏற்படு கிறது என்று மருத்துவ உலகிற்கு புத்துயிர் ஊற்றிய லூயில் பாஸ்டர், ராபர்ட் கோச் போன்ற அறிவியலாளர்க ளால் மனிதனைப் பீடித்த நோய்களிலிருந்து 19ம் நூற்றாண்டில் விடுதலை கிடைத்தது. நோய்க் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக அதற்கான வீரியமிக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்றைக்கு நாம் கண்டுபிடித்திருக்கிற ஒவ்வொரு நோய்க் கிருமிகளுக்கும் ஒரு ஆண்டிபயாடிக் மருந்து களை கண்டுபிடித்திருக்கிறோம். அதன் வழியே நோயுற்ற வர்களை பிணியிலிருந்து காப்பாற்றி வெகு விரையிலே சகஜநிலைக்கு கொண்டு வருகிறோம். இப்படியான பல நூற்றாண்டுகால மருத்துவ அறிவியில் கார்ப்பரேட் கைகளில் சிக்கிக் கொண்டுவிட்டதே என்று வருத்தப்பட்டு அதை மீட்டெடுப்பதற்கான வழியைத் தேடாமல், அல்லோ பதி மருத்துவமே தவறு என்று பேசுபவர்களைக் கண்டால் மிகவும் கவலையாக இருக்கிறது. அல்லோபதி மருத்துவ மும் இன்றைய நவீன கால வாழ்க்கை முறையில் அவ சியமான ஒன்றாகிவிட்ட நிலையில் அனைத்து மருத்துவ முறைகளையும் உள்ளடக்கிய புரிதலுடன்கூடிய ஓர் மருத்துவ சமூகம் இன்னமும் வளர வேண்டியிருக்கிறது.
இத்தகைய கிருமிகளுடான போராட்டத்தில் முக்கிய மாக உடல் அதிகமாக வெப்பமாகி உள்ளுறுப்புகள் செய லிழக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதேசம யம் கிருமிகள் உள்ளுறுப்புகளை அழித்துவிடாதவாறும் துரிதமாகச் செயல்பட வேண்டும். ஆக, காய்ச்சல் வந்த வர் மருத்துவமனைக்குச் செல்கிற போது மருத்துவர் அவரைப் பரிசோதனை செய்து தேவைப்பட்டால் மாத்திரை மருந்துகளை, ஆண்டிபயாட்டிகளை பரிந்து ரைப்பார். நோயின் தீவிரத்தை அளவிடுவதற்கு காய்ச்ச லின் அளவு என்பதுகூட ஒரு குறியீடுதான். எனவே மருத்துவர் ஒரு தெர்மோமீட்டரை எடுத்து நாக்கின் கீழே நுழைத்து காய்ச்சலின் தீவிரத்திற்கு ஏற்ப வெளி நோயாளியாகவோ அல்லது உள்நோயாளியாகவோ சேர்ந்து குணமடையச் சொல்லி அறிவுறுத்துவார். இப்படியாக ஆண்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிட்ட வுடன் அவை உணவுக்குழாய் வழியே குடலிற்குள் சென்று அங்கிருந்து இரத்தம் வழியாக எல்லா உறுப்பு களுக்கும் சென்றடைந்து, நோய்கிருமிகளைத் தாக்கி சண்டையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறது. கிருமிகள் எல்லாம் ஒருவழியாக கொன்று அழிக்கப்பட்ட வுடன் அப்போது வெளியிட்டுக் கொண்டிருந்த வேதியல் வெடி மருந்துகளும் குறைந்துவிடும். இப்படி எதிரிகள் கொல்லப்பட்ட சேதியெல்லாம் மறுபடியும் ஒற்றர்கள் மூலமாக இரத்தத்தின் வழியே ஹைப்போதலாமஸிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஓகோ! எல்லாம் சரியாகி விட்டதா, அப்ப சரி என்று உடலின் ஆரம்பத்திலிருந்த உள் மைய வெப்பநிலைக்கு (98.6° F) உடனே சருக்கிக்கொண்டு மீண்டும் வந்துவிடுகிறது.
அதுவரை தோல், இரத்தக்குழாய்கள், ஹார்மோன்கள் என உடலின் வெப்பத்தை அதிகரிப்பதற்காக போராடிக் கொண்டிருந்தவைகளெல்லாம், இதென்னடா கொடுமை? என்று மீண்டும் பழைய நிலைக்கே உடல் வெப்ப நிலையை கொண்டு செல்வதற்கு தடாலடியான வேலை யில் இறங்கத் துவங்குகின்றன. இதன் விளைவாக உடலில் உருவாகின்ற வெப்பத்தை கட்டுப்படுத்துவதும், ஏற்கனவே உருவாகியிருந்த வெப்பத்தை வேகமாக வெளியேற்றுவதுமான வேலைகள் அடுத்தடுத்து நிகழத் துவங்குகிறது. இப்போது தோலிற்கு கீழே செல்கின்ற இரத்தக்குழாய்கள் நன்றாக விரிவடைந்து இரத்தஓட்டம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக உடல் நன்றாக வியிர்த்து உடம்பெல்லாம் பனித்துளிபோல் தோன்றி உடல் வெப்பத்தை வெளியேற்ற ஆரம்பிக்கிறது. காய்ச்சல் வந்தவர்களுக்கு இப்படி வியர்ப்பதை வைத்துத்தான் மருத்துவர்கள் இனிமேல் எந்த பிரச்சனையுமில்ல, புள்ள குணமாகிடுச்சு என்று சொல்கிறார்கள். பெரியவர்களும்கூட உடம்பு நல்லா வேர்த்துடுச்சு, இனி காய்ச்சல் சரியாகிவிடும் என்று புரிந்து கொள்கிறார்கள். என்ன, படித்து முடித்தவுடன் ஒருமுறை காய்ச்சல் வந்து போன்றதைப் போன்ற உணர்வு தோன்றுகிறா? இப்படியான அடிப்படை காய்ச்சல் அறிவியலில் இருந்து நோயினை அணுகுகின்ற போதுதான் நோயினை தீர்ப்பதற்கான வழிமுறைகள் நமக்கு எளிதாக கிடைக்கின்றன.
-டாக்டர் இடங்கர் பாவலன்
idangarpavalan@gmail.com