tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இன்று மனிதச் சங்கிலி

தஞ்சாவூர், ஜூன் 22- மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட் டத்தை எதிர்த்து கடலோர மாவட்டங்கள் மற் றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஞாயி றன்று (ஜூன் 23) மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலை வனமாக்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வா தாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு, ஷேல் கேஸ் உள் ளிட்ட பல்வேறு பேரழிவுத் திட்டங் களை மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் திட்டமிட்டு செயல்படுத்த முனைந்து வருகின்றன. இத்திட்டங்களால் தமிழக விவ சாயமும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப் பட்டு, காவிரி பாசன மண்டலம் நாசமாகும் ஆபத்து உள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்டா மாவட்டங்களை பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறி விக்க வேண்டுமென வலியுறுத்தியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல கட்ட போராட் டங்களை நடத்தி வருகிறது. ஜூன் 5ந் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரை டெல்டா மாவட் டங்களில் இருசக்கர வாகன பிரச்சாரத்தை யும் நடத்தியது. இந்நிலையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி மறைந்த நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட “பேரழிப்பிற்கு எதிரான பேரி யக்கம்” சார்பில் ஞாயிறன்று (ஜூன் 23) ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து  விழுப்புரம் மாவட்டத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கேட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரையிலான 596 கி.மீ தூரம் “மனிதச் சங்கிலிப் போராட்டத்தை” நடத்தவுள்ளனர். இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், விளை நிலங்களை காப் பாற்றவும்  டெல்டா  மாவட்டங்களில் நடை பெறும் இந்த மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் சிபிஎம் மற்றும் அதன் வெகுஜன அமைப்பு கள் பெருந்திரளாக கலந்துகொள்ள உள்ளன. திமுக, மதிமுக, சிபிஐ, காங்கிரஸ், மமக,விசிக,முஸ்லீம் லீக்  உள்பட  பல்வேறு கட்சிகளும் பல்வேறு அமைப்பு களும்  இந்த இயக்கத்தில் திரளாக  கலந்து கொள்ள உள்ளன.