tamilnadu

img

அரியானாவில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் இதுவரை 83 மாணவர்களுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று!

அரியானாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 83 மாணவர்களுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோன நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இணையம் வழியாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, கொரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களில் மாநில அரசுகளின் விருப்பத்துக்கேற்ப பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. 
இதனை தொடர்ந்து, பா.ஜ.க ஆட்சி செய்யும்  அரியானா மாநிலத்தில் நவம்பர் 16ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த செவ்வாயன்று அரியானா ஜிந்த் மாவட்டத்தில் உள்ள 9 பள்ளிகளைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரேவாரி மாவட்டத்தில் உள்ள 12 அரசுப் பள்ளிகளில் 72 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
முன் எச்சரிக்கையின்றி பள்ளிகள் திறக்கப்பட்டதுதான் இதற்கு காரணம் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

;