tamilnadu

img

துணை மின் நிலையம் அமைக்க மக்கள் கோரிக்கை மாநாடு வலியுறுத்தல்

உளுந்தூர்பேட்டை, செப். 8-  எலவனாசூர்கோட்டை மற்றும் கெடிலம் பகுதிகளில் 22 கேவி துணை மின் நிலை யம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உளுந்தூ ர்பேட்டை ஒன்றிய  மக்கள் கோரிக்கை மாநாடு வலியு றுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் சனிக்கிழமை (செப். 7) நடை பெற்ற மாநாட்டிற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் வி.ரகுராமன் வரவேற்றார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம் சிறப்புரையாற்றினார். விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை,  மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், ஏ.வி.ஸ்டாலின்மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அரசுப் பேருந்துகள் அனைத்தும் புறவழிச் சாலையில் செல்லாமல் எலவனாசூர்கோட்டை ஊருக்குள் வந்து செல்ல வேண்டும், அரசு கலைக்கல்லூரி அமைத்திட வேண்டும், ஆசனூர் சிப்காட் தொழிற்பேட்டையை விரிவு படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், தரணி, ஏ.சித்தூர், பண்ணா ரியம்மன், பெரியசெவலை ஆகிய சர்க்கரை ஆலை களில் கரும்பு விவசாயி களுக்கு வழங்கவேண்டிய பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தாமல் அணை க்கட்டை புணரமைத்து புதிய ஷட்டர் அமைக்க வேண்டும், கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும், 100 நாள் வேலை த்திட்டத்தை அமலாக்கி சட்டக்கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.ஜெய மூர்த்தி, வி.மார்த்தாண்டன், என்.ராஜமாணிக்கம், எஸ்.மலர், என்.சுப்பிரமணி யன், எம்.ஏழுமலை, டி.பச்சை யப்பன், சி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.